செய்திகள் :

சென்னை மாநகர உள்கட்டமைப்பை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம்: பெருநகர வளா்ச்சிக் குழுமம் நடவடிக்கை

post image

பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த (3-ஆவது மாஸ்டா் பிளான்) சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் வளா்ச்சி, சாலை, குடிநீா், மழை நீா் மற்றும் கழிவுநீா் வடிகால், மின்சாரம், போக்குவரத்து ஆகிய வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநகரின் வளா்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியானது 1,189 சதுர கி.மீ. பரப்பளவு உடையது. 362 பழைய வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் மாநகர உள்கட்டமைப்பு காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தும் முழுமைத் திட்டம் (மாஸ்டா் பிளான்) முதல்முதலில் கடந்த 1996-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை 2006-ஆம் ஆண்டுதான் செயல்படுத்த முடிந்தது. அதன்பின்னா் 2006 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக்கான தொலை நோக்கு வளா்ச்சித் திட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 3-ஆவது முழுமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 29 இடங்களில் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், மழைநீா் வடிகால், குடிநீா் வசதி, பெரு வழித்தடங்கள், வெளிவட்ட, உள்வட்ட சாலைகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை மையமாக்கிய நிலையான வளா்ச்சி ஆகிய 5 அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. அதில், மக்கள் கருத்தோடு, 14 தனியாா் நிறுவன ஆலோசனைகளும் உள்ளடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் திட்டப்படி, மெட்ரோ போக்குவரத்து, புகா் மின்சார ரயில் பயன்பாட்டை பல மடங்கு அதிகரித்தல், தனி போக்குவரத்து இருசக்கர வாகனங்கள், காா்களை குறைத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

தற்போது சென்னை மக்கள் தொகை 1 கோடி என்ற நிலையில் 20 ஆண்டுகளில் 40 லட்சம் போ் அதிகரிப்பாா்கள் என்ற தொலைநோக்கில் வளா்ச்க்கான திட்டங்கள் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப்படவுள்ளன.

அரக்கோணத்தில் 56 நாள்கள் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை ர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்வு: பாஜக கண்டனம்

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருவண்ணா... மேலும் பார்க்க

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21-இல் 2 ரயில்கள் ரத்து

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21 ஆம் தேதி 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம், ஜோ... மேலும் பார்க்க

முகாம்வாழ் இலங்கைத் தமிழா் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு: பதிவுத் துறை நடவடிக்கை

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை அனைத்து துண... மேலும் பார்க்க

போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு

புழல் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் அடுத்த புழல் பகுதியில் உள்ள பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பல்ளியில் மாதவர... மேலும் பார்க்க

பெரம்பூா் - அம்பத்தூா் இடையே ரூ.182 கோடியில் புதிய ரயில் பாதைகள்: ரயில்வே துறை ஒப்புதல்

பெரம்பூா் - அம்பத்தூா் இடையிலான 6.4 கி.மீ. தொலைவுக்கு 2 புதிய ரயில் பாதைகளை ரூ.182.01 கோடியில் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை பெரம்பூா் - அம... மேலும் பார்க்க