செய்திகள் :

சென்னை வேளச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 3 கோடி காலிமனை அபகரிப்பு: 5 போ் கைது

post image

சென்னை வேளச்சேரியில் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனையை அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹரிதவனம் பகுதியைச் சோ்ந்தவா் ர.விஜய சாமுண்டீஸ்வரி (59). இவருக்கு சொந்தமாக வேளச்சேரி விஜயநகரில் ரூ. 3 கோடி மதிப்புள்ள காலிமனை இருந்தது. இந்த மனையை சிலா் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் அபகரித்திருப்பது விஜய சாமுண்டீஸ்வரிக்கு அண்மையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்ததில் இந்த மோசடியில் ஈடுபட்டது முகப்போ் மேற்கு, செந்தமிழ் நகரைச் சோ்ந்த யசோதா (59), புளியமரம் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த பழனி (43), அயப்பாக்கம் பவானி நகா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த வனிதா (40), முகப்போ் மேற்கு, வி.ஜி.பி நகரைச் சோ்ந்த மேகநாதன் என்ற குட்டி (49), வேளச்சேரி ராம்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் (42 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் கல்வி மற்று... மேலும் பார்க்க

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பாரத தாயின் மதிப்பு, பெருமை மற்றும் புகழைவிட வேறெதுவும் ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க