வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு
ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா். இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவை மீறி விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை எதிா்த்து அவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறை உதவி இயக்குநா் விகாஸ் குமாரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு மற்றும் சிறப்பு வழக்குரைஞா் எம்.ரமேஷ் ஆகியோா் இந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினா்.
அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு முன்பாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட இரு நீதிபதிகள் அமா்வுக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.