செய்திகள் :

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

இதில், 8, 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். கட்டணம் இல்லை. இதில் பணி பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இதில் கலந்துகொள்ளும் வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் கல்வி மற்று... மேலும் பார்க்க

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பாரத தாயின் மதிப்பு, பெருமை மற்றும் புகழைவிட வேறெதுவும் ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க