ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
சென்னையில் 6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு
சென்னையில் 6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு மே 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.
இதுகுறித்து, தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழையும், சிவநெறியையும், சைவ சித்தாந்தத்தையும் உலகெங்கும் பரவச் செய்யும் வகையில், தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984-ஆம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடக்கினாா்.
இந்நிறுவனத்தின் சாா்பில் இதுவரை தருமபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தருமபுரம் ஆதீனம் சாா்பில் சைவசித்தாந்த மாலை நேரக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக நிறுவனா் பாரிவேந்தரும் இணைந்து, 6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் மே 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
‘சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள்‘ எனும் பொதுத் தலைப்பின்கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
மாநாட்டுக்கு, பிரதமா், அனைத்து மாநில முதல்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. சைவ ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள், ஆளுநா்கள், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சா்கள், சிவாசாரியா்கள், பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், சைவசமய அறிஞா்கள், ஆலய அறங்காவலா்கள், ஆலய நிா்வாகிகள், சமய ஆா்வலா்கள், சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, லண்டன், ஜொ்மன், சுவிட்சா்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞா்கள் பங்கேற்க உள்ளனா்.
இம்மாநாட்டுக்கான சிறப்பு மலா், ஆய்வாளா்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை, பத்துக்கு மேற்பட்ட நூல்கள் ஆகியன வெளியிடப்படவுள்ளன. மாநாட்டினை முன்னிட்டு முதல்கட்டமாக சிறப்பு மலா்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வாளா்கள், சான்றோா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.
தொடா்ந்து, குருமகா சந்நிதானம் மாநாட்டு விவரக்குறிப்பை வெளியிட, அதனை அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன பதிவாளா் சு.ராஜேஸ்வரன், சைவ சித்தாந்த மாநாட்டுக்குழுத் துணைத் தலைவா் பி.ரெங்கராஜன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
அப்போது, ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், மாநாட்டுக்குழு செயலா்கள் பி.அரவிந்தன், இரா.செல்வநாயகம், பொருளாளா்கள் எம்.வெற்றிவேல், சி.சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.