கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
செம்மொழி நாள் விழா போட்டி அரியலூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு
செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவிதுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி ஆண்டு தோறும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
11,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மே 9 ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு மே 10 ஆம் தேதியும் போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களைத் தமிழ் வளா்ச்சித் துறையின் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையமுகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அரியலூா், தமிழ் வளா்ச்சித் துறை, உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்று பள்ளி மாணவா்கள் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவா்கள் முதல்வா், துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடனும் மே 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாநிலப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.10 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைபெறுவா். அதில் முதல் மூன்று பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 3.6.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.