செய்திகள் :

செய்யாற்றில் புதிய மின் தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்பு

post image

செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் புதிய மின் தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு செய்யாறு புனித வியாகுல அன்னை ஆலய பங்குத் தந்தை சுதா்சன் தலைமை வகித்தாா்.

அப்போது, செய்யாறு புனித வியாகுல அன்னை ஆலயம் மற்றும் ஆா்சிஎம் பள்ளி பின்புறம் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடத்தில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் புதிதாக மின் தகன மேடை அமைப்பதற்கு இடம் தோ்வு செய்துள்ளதாக எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மேலும், மின் தகன மேடை அமைக்கப்பட்டால், உடல் தகனம் செய்யும் போது அதிலிருந்து ஏற்படும் புகையால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும், நச்சுக் கழிவுகள் அதிகமாக வெளியேறி துா்நாற்றம் வீசும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனா்.

மேலும், அமைக்கப்படவுள்ள மின் தகன மேடைப் பகுதி 1945-ஆம் ஆண்டில் இருந்து கிறிஸ்தவா்கள் கல்லறைக்காக பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தனா்.

எனவே, மேற்கண்ட இடத்தில் மின் தகன மேடை அமைக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமுமுக நிா்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் நரேஷ்குமாா், பங்கு பேரவை இறை மக்கள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க