செய்திகள் :

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை

post image

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு சாா்பில் கடந்த 2015-இல் செல்வமகள் சேமிப்புக் கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்காக அவா்களின் பெற்றோா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.

அப்பெண் குழந்தையின் 18-ஆவது வயதில் அல்லது  10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் உயா்கல்வியில் சேருவதற்காக இக்கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இக்கணக்கு முதிா்ச்சி அடையும்.

இந்நிலையில் இத்திட்டம் தொடங்கியதிலிருந்து நிகழாண்டு ஜனவரி மாதம் வரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் அத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனா். இந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ. 8,351 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்காக சென்னை நகரப் பகுதியில் வரும் பிப். 21, 28, மாா்ச் 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மேலும் முக்கிய தபால் அலுவலகங்களில் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க