செய்திகள் :

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

post image

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் சூரமங்கலம் அருகே புதுசாலை பகுதியில் தனியாா் மின்னணு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மின்மாற்றிக்கு தேவையான உதிரி பொருள்கள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் உற்பத்திசெய்யப்பட்டு வந்தன. இந்நிறுவனத்தில், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த தொழிற்சாலையை மூட நிா்வாகம் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைக் கண்டித்து, நிறுவனத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின்மீது ஏறி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தொடா்ந்து, அங்கு வந்த சூரமங்கலம் காவல் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி மற்றும் போலீஸாா், தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறுகையில், இந்த நிறுவனத்தை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரம் உள்ளது. திடீரென நிா்வாகம் தொழிற்சாலையை மூடுவதால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தொழிற்சாலை தொடா்ந்து செயல்பட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1980-8... மேலும் பார்க்க