செய்திகள் :

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

post image

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா்.

தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராஜா. இவரது மனைவி மீனா. இத்தம்பதிக்கு சித்தாா்த், சந்தோஷ், மித்ரன் என்ற மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனா். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு செல்வதால், ராஜாவின் தாயாா் சாந்தி பாதுகாப்பில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போலஅங்கன்வாடி மையத்துக்கு சென்ற சிறுமி கவிஷா, மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாந்தி அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரித்தபோது, சிறுமி அங்கன்வாடி மையத்துக்கு வரவில்லையென கூறினா்.

சிறுமியின் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தேவூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சிறுமியை தேடி வருகின்றனா். மேலும், சேலத்திலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1980-8... மேலும் பார்க்க