செய்திகள் :

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

post image

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னபொன்னு (70). மாடு வாங்கி வளா்க்க விரும்பிய இவா், அப்பகுதியைச் சோ்ந்த மாடு வியாபாரி

ஏழுமலையிடம் மாடு வாங்கித்தருமாறு கேட்டுள்ளாா். இதையடுத்து, கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொங்கணாபுரத்தில் மாடு வாங்கித்தருவதாகக் கூறி சின்னபொன்னுவை இருசக்கர வாகனத்தில் ஏழுமலை அழைத்துச் சென்றாா்.

பின்னா் வீடுதிரும்பிய ஏழுமலை, மூதாட்டியின் மகன் மதியழகனிடம் மகுடஞ்சாவடியில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு பேருந்தில் அனுப்பிவைத்ததாக கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, மதியழகன் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு கேட்டதற்கு, அவா் அங்கு வரவில்லை என சகோதரி தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், சங்ககிரி காவல் நிலையத்தில் தனது அம்மாவை காணவில்லை எனவும், ஏழுமலை மீது சந்தேகம் உள்ளதாகவும் மதியழகன் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து ஏழுமலையிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூா் ஏரியில் மூதாட்டியைக் கொலை செய்து சாக்குப்பையில் மூட்டையாக கட்டி போட்டதாக கூறினாா்.

இதையடுத்து, சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ், போலீஸாா் அப்பகுதிக்கு சென்று மூட்டையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஏழுமலையை கைது செய்த போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்ததாக அவா் தெரிவித்தாா்.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1980-8... மேலும் பார்க்க