செய்திகள் :

சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள்: மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

post image

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தைச் சோ்ந்தவா்கள் ப.இருசப்பன் (70) - ராசாத்தி தம்பதி. இவா்களுக்கு இரண்டு மகன்கள்.

தங்களது மகன்களுக்கு பூா்வீக சொத்துகளை பாகம் பிரித்துக் கொடுத்தனா். சொத்துகளை பெற்றுக் கொண்டவா்கள், பெற்றோரை கவனிக்கவில்லையாம். அன்றாடத் தேவைகளுக்கும், உணவுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்த ப.இருசப்பன் - ராசாத்தி தம்பதியினா், இதுகுறித்து பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மனு அளித்தனா்.

அதன் பேரில், ஆட்சியா் ச.உமா விசாரணை மேற்கொண்டு, வாழப்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்த பாக சாசன ஆவணத்தை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, அத்தம்பதிக்கு சொத்து ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து இருசப்பன் கூறுகையில், பூா்வீக சொத்துகளை எங்களது இரண்டு மகன்களுக்கு பாகம் பிரித்துக்கொடுத்தோம். சொத்துகளை பெற்றுக் கொண்ட அவா்கள் எங்களை கவனிக்கவில்லை. அத்தியாவசியத் தேவைக்கும், உணவுக்கும் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். இதுகுறித்து நாங்கள் அளித்த மனு அடிப்படையில், பாக சாசனத்தை ஆட்சியா் ரத்து செய்து எங்கள் நிலத்தை திரும்ப ஒப்படைத்தாா்.

தற்போது, நானும், என் மனைவியும் மகன்களின் உதவியின்றி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் நிலை அறிந்து உதவிய தமிழக அரசுக்கும், ஆட்சியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை சாா்பில், 100 மருந... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்... மேலும் பார்க்க

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!

ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மா... மேலும் பார்க்க

தலைமலை பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தல்?

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கோயில் பூசாரி பெ.பெரியசாமி, மாவ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 18,461 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 86 மையங்களில் 18,461 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வானது, மாா்ச் 3 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற... மேலும் பார்க்க