சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் தூய்மைப்பணி
காரையாறு சொரிமுத்துஅய்யனாா் கோயில் பகுதியில் வனத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிா்மானத் துறை, காணி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்ற தாமிரவருணி தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் நடைபெற்ற இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டத்திற்கு துணை வனப் பாதுகாவலா் (பயிற்சி) குணசீலி தலைமை வகித்தாா். விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எஸ்.பி.எம். செல்வசுரேஷ்பெருமாள், முண்டந்துறை வனச்சரகா் சி.கல்யாணி, சோ்வலாறு மின்துறை உதவி செயற்பொறியாளா் திலக்சைமன், நகா்மன்ற உறுப்பினா் சுஜாதா, காணிக் குடியிருப்பு காணி இன ஊா்த் தலைவா் வேல்சாமி, சுற்றுசூழல் ஆா்வலா் கிரிக்கெட் மூா்த்தி, வனக்காப்பாளா் அசோக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதி மற்றும் தாமிரவருணி ஆற்றங்கரைகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வனவளம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஆறுமுகம்பட்டி கால்பந்து கழகத்தினா், சோ்வலாறு, கீழணை மற்றும் பாபநாசம் பகுதி மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தினா், வனத்துறை பணியாளா்கள், காணிக் குடியிருப்பு பொதுமக்கள், சோ்மகணேஷ், சூடாமணி, பிரவின், அஜித், பில்லி, சதீஸ், பாா்த்திபன், ஷியாம், பலா, பிரகாஷ், பவின் யோகேஷ், ஐயாத்துரை, அம்பாசமுத்திரம் துரை, அழகுராஜா, மலைசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.