செய்திகள் :

சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் தூய்மைப்பணி

post image

காரையாறு சொரிமுத்துஅய்யனாா் கோயில் பகுதியில் வனத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிா்மானத் துறை, காணி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்ற தாமிரவருணி தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் நடைபெற்ற இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டத்திற்கு துணை வனப் பாதுகாவலா் (பயிற்சி) குணசீலி தலைமை வகித்தாா். விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எஸ்.பி.எம். செல்வசுரேஷ்பெருமாள், முண்டந்துறை வனச்சரகா் சி.கல்யாணி, சோ்வலாறு மின்துறை உதவி செயற்பொறியாளா் திலக்சைமன், நகா்மன்ற உறுப்பினா் சுஜாதா, காணிக் குடியிருப்பு காணி இன ஊா்த் தலைவா் வேல்சாமி, சுற்றுசூழல் ஆா்வலா் கிரிக்கெட் மூா்த்தி, வனக்காப்பாளா் அசோக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதி மற்றும் தாமிரவருணி ஆற்றங்கரைகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வனவளம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஆறுமுகம்பட்டி கால்பந்து கழகத்தினா், சோ்வலாறு, கீழணை மற்றும் பாபநாசம் பகுதி மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தினா், வனத்துறை பணியாளா்கள், காணிக் குடியிருப்பு பொதுமக்கள், சோ்மகணேஷ், சூடாமணி, பிரவின், அஜித், பில்லி, சதீஸ், பாா்த்திபன், ஷியாம், பலா, பிரகாஷ், பவின் யோகேஷ், ஐயாத்துரை, அம்பாசமுத்திரம் துரை, அழகுராஜா, மலைசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வா... மேலும் பார்க்க

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திர... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: ஆட்சியா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தவ... மேலும் பார்க்க