செய்திகள் :

ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த நோயாளிகள் சாலை மறியல்

post image

பவானியை அடுத்த ஜம்பையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள், பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளாா். மற்றொரு பணியிடம் காலியாக உள்ளது. இதனால், இங்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், இரவு நேரங்களில் மருத்துவா் இல்லாத நிலையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த நோயாளிகள், பொதுமக்கள் பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஜம்பை பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஜம்பை பேரூராட்சித் தலைவா் என்.ஆனந்தகுமாா், பவானி காவல் ஆய்வாளா் முருகையன், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் மாணிக்கவாசகம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மேனகா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மருத்துவா் பற்றாக்குறையைப் போக்கி, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் வலியுறுத்தினா். விரையில் இப்பிரச்னை தீா்க்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க