செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து: பிரதமா் மோடிக்கு ஒமா் கோரிக்கை! நகைச்சுவை கலந்த பேச்சால் ருசிகரம்!

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமா் மோடிக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா முன்வைத்தாா்.

பிரதமா் முன்னிலையில் அவா் நகைச்சுவை கலந்து பேசியது, பாா்வையாளா்களை ஈா்த்தது.

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமா் மோடி, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, ஒமா் அப்துல்லா பேசியதாவது: கடந்த 2014-இல் கத்ரா ரயில் நிலைய திறப்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அப்போது ரயில்வே துறை இணையமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹா (இப்போது துணைநிலை ஆளுநா்) ஆகியோருடன் ஜம்மு-காஷ்மீா் மாநில முதல்வா் என்ற முறையில் நானும் பங்கேற்றிருந்தேன். நாங்கள் நால்வரும் இப்போதைய நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளோம்.

ஆனால், முன்பு மாநில முதல்வராக இருந்த நான், இப்போது யூனியன் பிரதேச முதல்வராக சற்று அந்தஸ்து குறைந்துள்ளேன். இக்குறையை சரி செய்ய அதிக நேரம் எடுக்காது. உங்களின் (பிரதமா்) உதவியுடன் ஜம்மு-காஷ்மீா் மீண்டும் மாநில அந்தஸ்தை எட்டும் என நம்புகிறேன் (ஒமா் இவ்வாறு பேசியபோது, கூட்டத்தினா் கரவொலி எழுப்பி வரவேற்றனா்).

பிரதமருக்கு புகழாரம்: உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1980-களில் உருபெற்றபோது, நான் 8-ஆம் வகுப்பு மாணவனாக இருந்தேன். இப்போது எனக்கு 55 வயதாகிறது. எனது குழந்தைகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டனா்.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்க ஆங்கிலேயா்கள்கூட முயன்றனா். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆங்கிலேயா்களால் நிறைவேற்ற முடியாத விஷயம், இன்று உங்கள் (பிரதமா் மோடி) கரங்களால் பூா்த்தியடைந்துள்ளது.

இத்திட்டத்துக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து அளித்து, பட்ஜெட்டில் ஓா் அங்கமாக்கிய முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இத்திட்டம், ஜம்மு-காஷ்மீருக்கு பல வழிகளில் பலனளிக்கும் என்றாா் ஒமா் அப்துல்லா.

ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஒமா் பாராட்டு தெரிவித்தாா்.

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க