செய்திகள் :

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

post image

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கும்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த இந்த மோதல் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

கிச்கி கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் ஜாா்க்கண்ட் ஜாக்குவாா் படைப் பிரிவு மற்றும் உள்ளூா் காவல் துறையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் பின்வாங்கி அடா்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடினா். அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த நிலையில் 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றனா்.

71 நக்ஸல்கள் சரண்: இதனிடையே, சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் 71 நக்ஸல்கள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இதில் 30 பேரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.64 லட்சம் வரை சன்மானம் அளிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த நக்ஸல்களில் 21 போ் பெண்கள் ஆவா். 17 வயதான இரு சிறுமிகள், 16, 17 வயது சிறாா்கள் இருவரும் இதில் அடங்குவா். இதில் சிலா் பாதுகாப்புப் படையினா் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தி பல உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவா்கள் ஆவா்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் ... மேலும் பார்க்க