செய்திகள் :

ஜாா்க்கண்ட், கா்நாடகம், ஆந்திரத்தில் ரூ.6,405 கோடியில் ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

ஜாா்க்கண்ட், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 7 மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் ரூ. 6,405 கோடி செலவில் இரண்டு பன்வழி ரயில்தட திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த இரண்டு ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கோடொ்மா முதல் பா்காகானா வரையிலான 133 கி.மீ. நீள ரயில் வழித் தடம், மாநிலத்தின் முக்கிய நிலக்கரி உற்பத்தி பகுதிகள் வழியாகக் கடந்து செல்வதோடு, ராஞ்சி முதல் பிகாா் மாநிலம் பாட்னா வரையிலான தொலைவை மிகக் குறுகிய தொலைவு பயணமாக மாற்றும் திறனுடைய வழித்தடமாகவும் உள்ளது. இந்த 133 கி.மீ. நீள ரயில் வழித் தடம் இருவழித் தடமாக மாற்றப்பட உள்ளது.

அதுபோல, கா்நாடகத்தின் பல்லாரி மற்றும் சித்ரதுா்கா மாவட்டங்கள் மற்றும் ஆந்திரத்தின் அனந்தபூா் மாவட்டம் வழியாகப் பயணிக்கும் 185 கி.மீ. நீள பல்லாரி முதல் சிக்ஜாஜூா் வரையிலான ரயில் வழித் தடமும் இருவழித் தடமாக மாற்றப்பட உள்ளது.

இந்தப் பன்வழி ரயில் தட திட்டத்தின் மூலம் சுமாா் 28.19 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட 1,408 கிராமங்களில் போக்குவரத்து இணைப்பு விரிவடையும். இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் நிலக்கரி, இரும்புத் தாது, இறுதி வடிவம் பெற்ற எஃகு, சிமென்ட், உரங்கள், வேளாண் பொருள்கள், பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்ட சரக்குகள் அதிகம் எடுத்துச் செல்லப்படும் பகுதிகளாகும். எனவே, இந்த ரயில் மேம்பாட்டுத் திட்டம், இந்தப் பகுதிகளின் சரக்குகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 4.9 கோடி டன் அளவுக்கு கூடுதலாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த இரண்டு ரயில் திட்டங்களும், தற்போதுள்ள ரயில் வழித்தடத்தை மேலும் 318 கி.மீ. தூரம் அதிகரிக்கும். ரயில்கள் மூலம் அதிக சரக்குகள் எடுத்துச் செல்லப்படும் என்பதால், இந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்’ என்று ரயில்வே அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க