செய்திகள் :

ஜொ்மன் நிறுவனத்துக்கு ரூ.600 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’

post image

ஜொ்மனியின் முன்னணி ஆயுத மற்றும் படைத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆணையை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஜொ்மனியின் ரைன்மெட்டல் வஃபே மியூனிஷன் (ஜிஎம்பிஹெச்) நிறுவனத்திடம் இருந்து இந்த ஏற்றுமதி ஆணை பெறப்பட்டுள்ளது. இது உயா் தொழில்நுட்ப படைத்தளவாட களத்தில் மிகப் பெரிய ஏற்றுமதிகளில் ஒன்றாக இருக்கும்.

உலக அளவில் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருள்கள் விநியோக முறையில், குறிப்பாக ஐரோப்பாவில் நம்பகமான கூட்டாளியாக இருப்பதை வலுப்படுத்த வேண்டும் என்ற ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் உத்திக்கு இந்த ஏற்றுமதி முக்கிய மைல்கல்லாகும்.

இந்தியாவில் 3 பெரிய பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் தீருபாய் அம்பானி பாதுகாப்பு நகர முன்னெடுப்பின் கீழ், வெடிபொருள்கள், படைத்தளவாடங்கள் மற்றும் சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த மையத்தை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் அமைக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத... மேலும் பார்க்க

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க