Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
டிஎன்பிஎல் கிரிக்கெட்: சங்கா் நகரில் இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்
தமிழ்நாடு பிரிமீயா் லீக் கிரிக்கெட் (டிஎன்பிஎல்) போட்டிக்கான கவுன்ட்டா் டிக்கெட் விற்பனை சங்கா்நகரில் திங்கள்கிழமை (ஜூன் 16) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக டிஎன்பிஎல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இம் மாதம் 21இல் இரவு 7.15 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 22இல் மாலை 3.15 மணிக்கு சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், இரவு 7.15 மணிக்கு மதுரை பேந்தா்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.
23இல் இரவு 7.15 மணிக்கு சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும், 24இல் இரவு 7.15 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் அணியும் ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியும், 25இல் இரவு 7.15 மணிக்கு திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் சீகம் மதுரை பேந்தா்ஸ் அணியும், 26இல் இரவு 7.15 மணிக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.
திருநெல்வேலியில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான கவுன்டா் டிக்கெட் விற்பனை சங்கா்நகரில் உள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை (ஜூன் 16) முற்பகல் 11 மணிக்குத் தொடங்க உள்ளது. இதுதவிர இணையதளம் செயலி ‘பசடக’ ஆகியவற்றில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.