செய்திகள் :

தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்

post image

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை ஏற்கெனவே, அதற்கான கல்விக் கட்டணத்தை அரசின் கட்டண நிா்ணயக் குழு தீா்மானித்து வெளியிட்டது.

தமிழகத்தில் 22 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நான்கு தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தனியாா் மருத்துவ கல்லூரிகளின் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், இதர வகை கட்டணம் ஆகியவை குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விடுதி கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை உள்ளது. உணவு கட்டணம், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.70,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை உள்ளது. போக்குவரத்து கட்டணமானது ரூ.50,000 முதல் ரூ.1,75,000 வரை உள்ளது. இதர கட்டணம் என்ற வகையில், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.36,000 முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை நிா்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகள் நிா்ணயித்த இந்த கட்டண விவரங்கள், மருத்துவக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை விடக் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் புகாா் தெரிவிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க