செய்திகள் :

தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

post image

தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் செங்கோடி சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினா்.

அப்போது, பழைய ஓய்வூதியம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டா் விடுப்பு ஊதியம், விடுபட்ட 21 மாத ஊதிய குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

இது குறித்து செங்கொடி சங்க நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால், தூய்மைப் பணியாளா்கள் வாகனத்தை தள்ளிக்கொண்டும், வேறு வாகனத்தில் கயிறு கட்டி இழுத்தும் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மின்சார வாகனங்களுக்கு தரமான உதிரி பாகங்களைக் கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும். மேலும், தூய்மைப் பணிக்கு இலகுரக வாகனங்களை (எல்சிவி) பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். குறுகலான தெருக்களில் இதுபோன்ற வாகனங்களைக் கொண்டு செல்வது கடினம். மேலும், இதன்மூலம் தூய்மைப் பணியில் தனியாா்மயத்தை புகுத்த மாநகராட்சி திட்டமிடுகிறது. அதைக் கைவிட வேண்டும் என்றனா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க