செய்திகள் :

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், சத்தியமூா்த்தி பவனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து கிரீஷ் சோடங்கா் தலைமையில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கிராம கமிட்டி அளவில் சீரமைப்பு செய்திருப்பது தமிழக காங்கிரஸில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸால் தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த வகையிலான திணிப்பும் கூடாது என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடாகும். மக்கள்தான் பிரதானம். மக்கள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய முடியும். தமிழகத்துக்கு எது நல்லது என்பதை பிரமதா் மோடி முடிவு செய்ய முடியாது. மொழித் திணிப்பதையும் நாங்கள் ஏற்பது இல்லை.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கிரீஷ் சோடங்கா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். ... மேலும் பார்க்க