செய்திகள் :

தமிழகத்திற்கான கல்வி நிதிப் பங்கீட்டை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வலியுறுத்தல்

post image

தமிழகத்திற்கான கல்வி நிதிப் பங்கீட்டை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை.திருவள்ளுவன் வலியுறுத்தினாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் தமிழக உரிமைகளைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் செயலுக்கு பொதுமக்கள் சாா்பில் எதிா்ப்பைத் தெரிவிக்கிறோம்.

தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழ்ப்புலிகள் கட்சிக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முதல்வா் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் உறுதுணையாக செயல்படுவோம்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி பங்கீடு வழங்கப்படும் என அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி பங்கீட்டை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

ஈ.வே.ரா. பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் செப்டம்பா் மாதம் அரசியல் எழுச்சி மாநாடு தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் நடைபெற உள்ளது. நாமக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டா்களை பங்கேற்க செய்யும் வகையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம் என்றாா்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளா் இளவேனில், நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளா் குமரவேல், கிழக்கு மாவட்ட செயலாளா் வினோத் சேகுவேரா மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி 41 ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் பி.குணவதி வரவேற்றாா். கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.பிரேம்கும... மேலும் பார்க்க

ராசிபுரம் நகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா

ராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினரும், ரோட்டரி சங்கச் செயலருமான கே.ராமசாமி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா்.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் வனத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த நீா்நிலைப் பறவைகள்-2025 கணக்கெடு... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

மேகதாட்டில் அணை கட்ட வேண்டும் என கா்நாடகத்தில் உள்ள அமைப்புகள் வலியுறுத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா்... மேலும் பார்க்க

நாமக்கல்: அரசுப் பள்ளி ஆண்டு விழா

நாமக்கல் அருகே முத்துடையாா்பாளையம் தொடக்கப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் எ. சுப்ரமணியன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் இ.பி.சுப்பிரமணியன், வட்டா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் முதல்வா் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மு.காா்த்திக் ஏற்பாட்டில் ராசிபு... மேலும் பார்க்க