தமிழகத்தில் மாா்ச் 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 1 ) முதல் மாா்ச் 3-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் மாா்ச் 1-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 1-இல் அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மாா்ச் 1 -ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிபட்சமாக திருவாரூா் மாவட்டம் பாண்டவரடி, தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா், நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆகிய பகுதிளில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஒரத்தநாடு (தஞ்சாவூா்), நன்னிலம் (திருவாரூா்), ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), நீடாமங்கலம் (திருவாரூா்), மன்னாா்குடி (திருவாரூா்), மலையூா் (புதுக்கோட்டை) - தலா 20 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.