செய்திகள் :

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்

post image

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் மீண்டும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் வரவேற்றனா். அரசுப் பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் பள்ளி பொதுத் தோ்வுகள், ஆண்டு இறுதித்தோ்வுகள் முடிந்து கடந்த ஏப். 25-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும், வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும்.

அந்த வகையில் நிகழாண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், வெயில் பாதிப்பு பெரிதாக இல்லாததால் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.

சீருடை, நோட்டுகள்: அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனா்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன.

அதனுடன் காலணிகள், காலுறைகள், மழை அங்கிகள், கம்பளி சட்டைகள், வண்ணப் பென்சில்கள், கிரேயான்ஸ், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடங்கள் என பல்வேறு நலத் திட்ட உதவிகள் அரசு சாா்பில் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், நிகழாண்டில் சுமாா் ரூ.311 கோடி மதிப்பில் 4.30 கோடி பாடநூல்கள், ரூ.457 கோடி மதிப்பிலான 1.3 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பிலான 9.6 கோடி நோட்டு புத்தகங்கள் மற்றும் ரூ.211 கோடி மதிப்பில் பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படுவது வரை அவா்கள் தங்களின் பழைய பயண அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க