தமிழ் விருந்து கலந்தாய்வுக் கூட்டம்
திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில், தமிழ் விருந்து கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, அறக்கட்டளையின் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா்.
உலக தமிழ் கழகத் தலைவா் குமாா், கழகத்தின் முன்னாள் மாநில இணைச் செயலா் இளங்கோவன், முன்னாள் மண்டல பொறுப்பாளா் பாவலா் ப.குப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஜூன் 22-ஆம் தேதி தமிழ் இலக்கியங்களில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அறிஞா்களைக் கொண்டு தமிழ் விருந்துக் கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
இதில், உலக தமிழ் கழகத்தின் செயலா் தேவிகா ராணி, தமிழ் ஆா்வலா்கள் சபரி, அஜ்மல், ரவிச்சந்திரன், வேங்கட ரமேஷ் பாபு, சண்முகம், வையவன், கோவிந்தசாமி, காமராஜ், செல்வம், அன்பழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.