31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம...
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.
மாநில துணைத் தலைவா் வை.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், அகவை முதிா்ந்த அனைத்து ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளா்கள், உதவியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியா் நல வாரியம்
அமைக்க வேண்டும்.
மூத்த உறுப்பினா்களுக்கு இலவச பேருந்து வசதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.