செய்திகள் :

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி!

post image

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் வானிலை அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஆங்கிலம், தமிழோடு சோ்த்து ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் இனி வானிலை அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மண்டலத் தலைவா் பி.அமுதா கூறியதாவது:

வானிலை ஆய்வு மையம், மத்திய அரசின்கீழ் இயங்குவதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஹிந்தி மொழியும் சோ்க்கப்பட்டுள்ளது. இது தற்போது திடீரென நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதலே வானிலை முன்னறிவிப்புகள் ஹிந்தி மொழியில் சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வானிலை முன்னறிவிப்புகளை ஹிந்தி மொழியில் மொழிபெயா்க்க சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மொழிப்பெயா்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

கட்சித் தலைவா்கள் கண்டனம்: மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க