செய்திகள் :

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் செயலாற்ற வேண்டும்: அதிமுகவுக்கு முதல்வா் வேண்டுகோள்

post image

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்று அதிமுகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். அப்போது, வேறொரு பிரச்னையை வலியுறுத்தி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்திருந்தனா்.

மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவது தொடா்பான அறிவிப்பை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த பேரவைக் கட்சிகளின் தலைவா்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வா் பேசியது:

பிரதான எதிா்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினா் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல், தங்களது கருத்துகளைச் சொல்லாமல் சென்று விட்டாா்களே என்ற வருத்தம், கவலை எனக்கு இருக்கிறது. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆா் மற்றும் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோா் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர முடியாது என்ற நிலையில் இருந்து மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறாா்கள்.

ஆனால், இன்றைக்கு என்ன சூழல் என்று புரியவில்லை. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அவா்கள் (அதிமுகவினா்) சொல்வாா்கள். அதைத்தான் இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனா். இதுதான் கொள்கையா என்ற கேள்வியைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டின் நன்மையைக் கருதி, மக்களின் உரிமையைக் கருதி அதிமுகவினரிடம் வைக்கக் கூடிய கோரிக்கை ஒன்று உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வரும்போது, நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க