பரவிய வதந்தி: வாகனங்களுக்கு தீவைப்பு, கலவரம்; 144 தடையுத்தரவு... நாக்பூரில் என்ன...
தமிழ்ப் பல்கலை.யில் மகளிா் தின விழா
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் விழா ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ. பாரதஜோதி தலைமை வகித்தனா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், பழங்குடி மக்கள் ஆய்வு மையத் தலைவா் எம்.ஏ. சிவராமன், பிள்ளையாா்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆ. உதயகுமாா், நரிக்குறவா் பழங்குடி நலச் சங்க இயக்குநா் ம. சீத்தா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் து. ரோசி சிறப்புரையாற்றினா். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கினா்.
இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளா்களான முனைவா் இரா. இந்து, முனைவா் மா. பவானி, உதவியாளா் இ.ஸ்ரீ. இராமலெட்சுமி, இளநிலை உதவியாளா்கள் கோ. தனலெட்சுமி, இரா. கஸ்தூரி, மா. கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.