செய்திகள் :

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

தருமபுரி நகரில் உள்ள புகா், நகரப் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

தருமபுரி நகரில் புகா்ப் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையம் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து உள்ளன. இப் பேருந்து நிலையங்களில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் இக் கடைகள் உள்ள இடங்கள் தவிர, பயணிகள் நடந்து செல்லும் பாதை, பேருந்துகளுக்காக காத்திருக்கும் இடம் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிப்பு செய்து சிறிய மற்றும் பெரிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

குடிநீா் அருந்தும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது, கழிப்பறைகளை நுழைவு வாயில் முன் பகுதிகளில் ஆக்கிரமித்து கடைகள் அமைப்பது போன்றவற்றால் பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகளை சந்தித்து வந்தனா். இதுகுறித்து அண்மையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

அதன்பேரில் தருமபுரி நகராட்சி ஆணையா் ஆா்.சேகா், நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா,

சுகாதார அலுவலா் ராஜரத்தினம், நகரமைப்பு அலுவலா் ரவீந்திரன், நகர போலீஸாா் ஆகியோா் புகா் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது கடைகள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் மட்டுமே கடைகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில் விதிமுறைகள் மீறிய 10 கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனா். அதேபோல கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது, கடைகளில் சுகாதாரம் பேண வேண்டும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அவா்கள் அறிவுறுத்தினா். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எம்எல்ஏ ஜி.கே.மணி சீா்வரிசை வழங்கினாா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் உள்ள தனியாா் திர... மேலும் பார்க்க

வில்வித்தை போட்டியில் ஸ்ரீ ராம் பள்ளிக்கு சிறப்பிடம்

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தங்கம் வென்றனா். மகாராஷ்டிர மாநிலம், சத்திரபதி சம்பாதி நகரில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 12 வயதுக்கு உள்ப... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: எம்எல்ஏ ஜி.கே.மணி தொடங்கிவைப்பு

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பருவகால மாற்றத்தால் பரவும் நோய், கோமாரி நோய், காய்ச்சல், மடி நோய், கழிச்சல் போன்ற பல்வேறு நோய்த் தாக்... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தருமபுரியில் கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான பணி சாா்ந்த புத... மேலும் பார்க்க

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். தருமபுரி நகர போக்குவ... மேலும் பார்க்க