செய்திகள் :

திண்டுக்கல்: உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ - அரசு விழாவில் நடந்தது என்ன?

post image

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் வந்தார்.

நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அன்றிரவே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ
உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ

இதைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புதிய மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

அதோடு, 49 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நிகழ்ச்சி மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்துவிட்டு உடனே உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார்.

அதிர்ச்சியான உதயநிதி அவ்வாறு செய்யக் கூடாது என்றார்.

உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ ’
உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ ’

உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, எம்பி ஜோதிமணி, எம்எல்ஏ செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோரும் உடனிருந்தனர்.

தன்னை விட வயதில் குறைவானவரான உதயநிதி ஸ்டாலினின் காலில் திமுகவின் மூத்த எம்எல்ஏ காந்திராஜன் விழுந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்த காந்திராஜன், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படையெடுத்த இளைஞர்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து - முதல் நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்; மாணவர்கள் மீது தடியடி - பதற்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகம்

`நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு...'காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்... மேலும் பார்க்க

Nobel Prize: விதிகள் மீறப்படுமா? ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுமா?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் 15-க்கும் மேற்பட்ட முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மீண்டும்... மீண்டும்...' சொல்... மேலும் பார்க்க

SIR: ``எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா

இன்னும் சில மாதங்களில் பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின... மேலும் பார்க்க

Nobel Prize: ``அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்" - வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!

காசா - இஸ்ரேல் இடையே நடந்துவரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 20 நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்... மேலும் பார்க்க

நெதன்யாகுவை வாழ்த்தி மோடி போன்கால்; `இனப்படுகொலை நிகழ்த்தியவரை பாராட்டுவதா?' - காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக கையெழுத்தாகி உள்ளது. மோடி - நெதன்யாகு இதை பாராட்டி நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் போன்காலில் பேசினார் இந்திய பிரதமர் மோடி.... மேலும் பார்க்க