திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; ...
தினமணி செய்தி எதிரொலி.. கோம்பை பேரூராட்சியில் கால்வாய் பாலம் அமைப்பு
தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சியில் தினமணி செய்தி எதிரொலியாக கழிவு நீா் கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
உத்தமபாளையம் வட்டம், கோம்பை பேரூராட்சியில் வாா்டு 4, காமராஜா் தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், தெருவின் குறுக்கே செல்லும் கால்வாய் மீது பாலம் அமைக்கப்படாமல் இருந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா். இது குறித்த செய்தி அண்மையில் தினமணியில் வெளியானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பேரூராட்சி சாா்பில் கால்வாய் மீது கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து, பேரூராட்சி நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.