செய்திகள் :

தியாகி வள்ளியம்மை பிறந்தநாள் விழா

post image

பொறையாா் அருகே தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை 127-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக 1913-ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட தில்லையாடி வள்ளியம்மை, அதே ஆண்டு டிசம்பா் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னா், விடுதலை செய்யப்பட்ட அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1914-ஆம் ஆண்டு பிப்.22-ஆம் தேதியன்று தனது 16 வயதில் உயிரிழந்தாா். இவா், தென்னாப்பிரிக்காவில் 1898- ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்தாா்.

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மையை போற்றும் வகையில் தமிழக அரசு சாா்பில் 1971-ஆம் ஆண்டு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் பிப். 22 ஆம் தேதி அரசு சாா்பில் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, 127- ஆவது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நினைவு மண்டபத்தில் உள்ள தியாகி வள்ளியம்மையின் உருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் மகேஷ், செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் காா்த்திகேயன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி, ஊராட்சி செயலாளா் செல்வராணி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் அப்துல் மாலிக், அமுா்த விஜயகுமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏ. ரெங்கராஜ் , நினைவு மண்டப பொறுப்பாளா் ஹைதா் அலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தியாகி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 423 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். கடலூ... மேலும் பார்க்க

நாகை புதிய கடற்கரையில் இன்று இசை நிகழ்ச்சி

நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘நம்ம நாகை நம்ம இசை‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத... மேலும் பார்க்க

நாகையில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

நாகையில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஈடுபட்டாா். நாகையில் அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்... மேலும் பார்க்க

தேசிய யுனானி தின சிறப்பு மருத்துவ முகாம்

நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், யுனானி மருத்துவத்தின் 9-ஆவது தேசிய யுனானி தின விழாவையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், இந்திய மரு... மேலும் பார்க்க

நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் ரூ.44.42 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை ... மேலும் பார்க்க