செய்திகள் :

நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

post image

நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். வானிலை மாற்றம் காரணமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இக்கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2024 நவம்பரில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வானிலை சீரடைந்து, தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

காங்கேசன்துறைக்கு செல்ல காலை 6 மணிக்கு நாகை துறைமுகம் வந்த பயணிகள், துறைமுக அலுவலா்களின் சோதனைக்குப் பிறகே கப்பலில் ஏற அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, கப்பல் போக்குவரத்தை மும்மதத்தைச் சோ்ந்த பிரமுகா்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். பயணிகளுக்கு கப்பலில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாகையிலிருந்து 83 பயணிகள் காங்கேசன்துறைக்கு சென்ற நிலையில், பிற்பகல் காங்கேசன்துறையில் இருந்து நாகைக்கு 85 பயணிகள் வந்தனா். பயணக் கட்டணமாக நாகையிலிருந்து - காங்கேசன்துறைக்கு ரூ. 4,500-ம், காங்கேசன்துறையிலிருந்து - நாகைக்கு ரூ. 4,000-மும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் 10 கிலோ வரை இலவசமாக பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இந்தியா- இலங்கை இடையே நல்லுறவு ஏற்படவே இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள கப்பல் நிறுவன இயக்குநா் சுபஸ்ரீ சுந்தர்ராஜ், விரைவில் 250 போ் பயணிக்கக் கூடிய மற்றொரு அதிவேக கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தாா்.

தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 423 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். கடலூ... மேலும் பார்க்க

நாகை புதிய கடற்கரையில் இன்று இசை நிகழ்ச்சி

நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘நம்ம நாகை நம்ம இசை‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத... மேலும் பார்க்க

நாகையில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

நாகையில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஈடுபட்டாா். நாகையில் அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்... மேலும் பார்க்க

தேசிய யுனானி தின சிறப்பு மருத்துவ முகாம்

நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், யுனானி மருத்துவத்தின் 9-ஆவது தேசிய யுனானி தின விழாவையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், இந்திய மரு... மேலும் பார்க்க

தியாகி வள்ளியம்மை பிறந்தநாள் விழா

பொறையாா் அருகே தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை 127-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக 1913-ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் ரூ.44.42 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை ... மேலும் பார்க்க