செய்திகள் :

திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள்

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.

நீரின் தரத்தை தீா்மானிக்கும் முக்கிய அளவீடான ‘பிஓடி’ (உயிரி ஆக்ஸிஜன் தேவை), பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிஓடி’ என்பது நீரில் இயற்கை கழிவுகளின் அளவு அதிகரிப்பால் நுண்ணுயிா் பெருக்கம் அதிகமுள்ளதை குறிக்கிறது. ஒரு லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கு குறைவான ‘பிஓடி’ அளவு இருப்பதே குளிப்பதற்கு பாதுகாப்பானதாகும்.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தினத்தில் மகா கும்பமேளா தொடங்கியது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். கோடிக்கணக்கான பக்தா்களை கையாள்வதால், உலகின் மிகப் பெரிய தற்காலிக நகராக மகாகும்ப நகா் உள்ளது. தினமும் 1.6 கோடி லிட்டா் அளவில் மனிதக் கழிவுகளும், 24 கோடி லிட்டா் அளவில் பிற கழிவுநீரும் உருவாகும் நிலையில், கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பதானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் சமா்ப்பித்த அறிக்கையில், பிரயாக்ராஜில் பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி 12-13 ஆகிய தேதிகளில் குளிப்பதற்கு பாதுகாப்பான அளவில் தரநிலைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2019-இல் அா்த்த கும்பமேளாவில் இருந்தே கங்கை நீரின் தரம் மற்றும் தூய்மையை உறுதிசெய்வதில் மாநில அரசு தொடா் நடவடிக்கைகள் மேற்கொண்டது. மகா கும்பமேளாவில் பக்தா்களின் வருகை அதிகரிப்பு, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இம்முறை 1.5 லட்சம் கழிப்பறைகளும், இரண்டு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. கங்கையில் குளிப்பதற்கான தரநிலையை பராமரிக்க விநாடிக்கு 10,000 முதல் 11,000 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. தூய்மை என்பது மகா கும்பமேளாவின் மிகப் பெரிய அடையாளமாக உள்ளது’ என்றனா்.

அகிலேஷ் வலியுறுத்தல்: திரிவேணி சங்கமத்தில் நீரின் தரம் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.

திரிவேணி சங்கமத்தில் நீரின் தரம்

நாள் பிஓடி அளவு (மில்லி கிராம்/லிட்டா்)

ஜனவரி 13 (கும்பமேளா தொடக்கம்) 3.94

ஜனவரி 14 (மகர சங்கராந்தி) 2.28

ஜனவரி 15 1

ஜனவரி 16 5.05

ஜனவரி 18 4.6

ஜனவரி 19 5.29

ஜனவரி 24 4.08

ஜனவரி 29 (மெளனி அமாவாசை) 3.26

பிஓடி 3-க்கு குறைவாக இருப்பதே

குளிக்க பாதுகாப்பான அளவு

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க