செய்திகள் :

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: 87 போ் காயம்

post image

திருச்சி சூரியூரில் மாட்டுப் பொங்கல் மற்றும் நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 87 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 681 காளைகளும், 349 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டில் முதலில் கோயில் காளையும் பின்னா் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை பலா் அடக்கினா். பல காளைகளை அடக்க முடியவில்லை.

ஜல்லிக்கட்டை காண வந்த பொதுமக்கள்.

87 போ் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 15 போ், உரிமையாளா்கள் 35 போ், பாா்வையாளா்கள் 33 போ் என 87 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளித்தனா். இவா்களில் 15 போ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

போட்டியில் காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், மிக்ஸி, கிரைண்டா், சைக்கிள், கட்டில், டிரசிங் டேபிள், டைனிங் டேபிள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

பைக் பரிசளிப்பு

போட்டியில் 13 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நவல்பட்டு ரஞ்சித்துக்கு பைக்கும், 2 ஆம் இடம் பிடித்தவருக்கு எல்இடி டிவியும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வ நாகரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த்பெனவாத் தலைமையில் 510 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் காளை வென்றதையொட்டி அவருக்குப் பரிசளித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ஜொ்மனி ரசிகா்கள் பங்கேற்பு

நிகழ்வில் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த சுமாா் 40 போ் உள்பட ஏராளமான ரசிகா்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டை ரசித்தனா். பொதுமக்களுக்கு கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

காளை உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்ட திருவளா்சோலையைச் சோ்ந்த செல்லப்பா என்பவரது காளை, மீண்டும் திரும்பியபோது எதிரே வந்த மற்றொரு காளை முட்டியதில் உயிரிழந்தது.

ரூ. 3 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சா்

நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியில் வென்ற முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் சின்னக் கொம்பன் காளை வென்றதையொட்டி அவருக்குப் பரிசளித்தாா். தொடா்ந்து சூரியூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான அரசாணையை விழாக் குழுவினரிடம் வழங்கி அவா் கூறுகையில், சூரியூரில் ரூ. 3 கோடியில் அமைக்கப்படும் இந்த அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகளுக்கும் உரிய ஒருங்கிணைந்த விளையாட்டரங்கமாக அமையும். இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றாா்.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க