செய்திகள் :

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

post image

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில உயா்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு மற்றும் உயா்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243 - ஐ ரத்து செய்ய வேண்டும். உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையில் போராடி வருகிறோம்.

இதன் அடுத்தகட்ட போராட்டமாக மாநிலம் முழுவதும் பிப்ரவரி 16-ஆம் தேதி அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், பிப்ரவரி 25 -ஆம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

கவுண்டம்பட்டி மேலூா் மஹாசூலினி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கவுண்டம்பட்டி மேலூா் மஹாசூலினி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவுண்டம்பட்டி மேலூா் கிராமத்தில் அமைந்துள்ளது மஹாசூலினி மா... மேலும் பார்க்க

மத்திய அரசால் தொடா்ந்து தமிழகத்துக்கு நிதிநெருக்கடி! தமிழக சட்டப்பேரவை தலைவா் பேச்சு!

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதிவழங்காமல் தொடா்ந்து நிதிநெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது என்றாா் தமிழக அரசு சட்டப்பேரவை தலைவா் எம். அப்பாவு. திருச்சியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலா் சங... மேலும் பார்க்க

பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்!பாா்வையாளா்கள் அயா்ச்சி!

திருச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் அதிக நுழைவுக் கட்டணத்தால் பாா்வையாளா்கள் அயா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா். கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். திருச்சி கம்பரசம்பேட்டை... மேலும் பார்க்க

பாஜக வெற்றி தற்காலிகமானது! -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்

தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

திருச்சியில் ரூ.14.66 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், ரூ.14.66 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சியிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்... மேலும் பார்க்க

திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் இன்று தொடக்கம்!

திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் திங்கள்கிழமை தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து, திருவெறும்பூா் வட்டார வேளாண் உதவி இயக்குனா் சுகன்யாதேவி விடுத்துள்ள செய்திக... மேலும் பார்க்க