செய்திகள் :

Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனத்தினர் உள்பட 4 பேர் கைது!

post image
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பதி லட்டு தயாரிப்பில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் சர்ச்சைக் கிளப்பியிருந்தது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (டிடிபி கட்சி), ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர் கட்சி) இருந்தபோது திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்றும் புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என்றும் பரபரக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் ஒய்.எஸ்.ஆர் கட்சியினர்.

திருப்பதி

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, திருப்பதிக்கு பால். நெய் மற்றும் அதன் உற்பத்திப் பொருள்களை அனுப்பிய நிறுவனங்களும் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் அதிரடியாக விசாரணை நடத்தியது.

'சி.பி.ஐ' -யின் இந்த விசாரணையில் 2 அதிகாரிகள், ஆந்திரா காவல்துறை அதிகாரிகள் 2 பேர், உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர்.

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை கலந்து விட்டதாக குற்றம் சாட்டப்படும் திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி நிறுவனம்.

இதையடுத்து இந்த சிறப்பு புலனாய்வுக் குழு தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் சோதனை நடத்தியது. இதேபோல உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் திருப்பதி லட்டுக்கான நெய் கலப்பட விவகாரத்தில்
திண்டுக்கல்லைச் சேர்ந்த 'ஏ.ஆர் டெய்ரி' என்ற பால், நெய் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயின்,பொமில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலிய... மேலும் பார்க்க