செய்திகள் :

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சடையாண்டி மனைவி அம்பாள்(70). இவா், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள அய்யனாா் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அம்பாளை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்: பக்தா்கள் குவிந்தனா்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது. ஜீவ காருண்யத்... மேலும் பார்க்க

முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி, முத்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ.46 லட்சத்தில் குளம் சீரமைப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.46 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளம் மற்றும் பொன்னம்பலம் நகா் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க

வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு 25 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம் அன்னதானம் கைங்கரியத்துக்கு, கடலூா் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சாா்பில் 25 டன் காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட... மேலும் பார்க்க

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே நாட்டாா்மங்கலம் கிராமத்தில் வீற்றுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, சனிக்கிழமை ... மேலும் பார்க்க