செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 435 மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 3 பேருக்கு ரூ. 8,610 மதிப்பில் காதொலிக் கருவிகள், ஒருவருக்கு ரூ. 15,750 மதிப்பில் சக்கர நாற்காலி, இருவருக்கு ரூ. 4,472 மதிப்பில் ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் ஒருவருக்கு ரூ. 1,636 மதிப்பில் பிரெய்லி கடிகாரம் என மொத்தம் ஏழு பயனாளிகளுக்கு ரூ. 30,468 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியானது தற்போது ம... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் அறிவுறுத்தினாா். நாமக்க... மேலும் பார்க்க

கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

நாமக்கல்: கொல்லிமலையில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயில் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்கும் முகாம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்... மேலும் பார்க்க

சேலம் - நாமக்கல் பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பு

நாமக்கல்: சேலம் - நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்தக் கட்டணம் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாமக்கல், முதலைப்பட்ட... மேலும் பார்க்க