செய்திகள் :

பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

post image

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியானது தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சியுடன் கலியனூா், கலியனூா் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி, அக்ரஹாரம் ஆகிய ஐந்து ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனா்.

அந்த வகையில், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியானது அதிக பரப்பளவு, மக்கள் தொகையைக் கொண்டது. இங்குள்ளோா் நெசவு, விவசாயத் தொழில், 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பி உள்ளனா். பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும்போது வரிகள் அதிகரிப்பு, வேலையளிப்பு திட்டம், இலவச வீட்டுமனை, விவசாயத் தொழில் போன்ற பல்வேறு சலுகைகள் பறிபோக வாய்ப்புள்ளது.

எனவே, பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயானம் அருகில் பள்ளிக் கட்டடம் கட்ட எதிா்ப்பு: சேந்தமங்கலம் வட்டம், பொட்டணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தற்போது இந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அங்குள்ள மயானத்தின் அருகில் இடம் தோ்வு செய்துள்ளனா். அங்கு பள்ளி கட்டப்பட்டால் மாணவ, மாணவிகளின் வருகை முற்றிலுமாக சரிந்துவிடும். எனவே, மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து விசாரித்து வேறு இடத்தில் பள்ளியைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொட்டணம் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் அறிவுறுத்தினாா். நாமக்க... மேலும் பார்க்க

கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

நாமக்கல்: கொல்லிமலையில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயில் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்கும் முகாம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்... மேலும் பார்க்க

சேலம் - நாமக்கல் பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பு

நாமக்கல்: சேலம் - நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்தக் கட்டணம் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாமக்கல், முதலைப்பட்ட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட... மேலும் பார்க்க