செய்திகள் :

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோயிலிலிருந்து கொடிப்பட்டம் புறப்பாடாகி, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னா் காப்பு கட்டிய ச.பாலசுப்பிரமணியன் வல்லவராயர், கொடிமரத்தில் திருவிழாக் கொடியை ஏற்றினாா். அதன் பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், மணியம் செந்தில்குமார், ஆறுமுகராஜ், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

பத்து நாள்கள் நடைபெறும் மாசித் திருவிழாவில் காலை, மாலை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க