தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி
திருப்பத்தூரில் அரசுப் பேருந்து மறியல்
பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, மதுரையிலிருந்து வந்த அரசுப் பேருந்து திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டது.
மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து (மாட்டுத்தாவணி) தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து புறப்பட்டது. முன்னதாக, அந்தப் பேருந்து நின்று கொண்டிருந்த போது திருப்பத்தூா் வரை செல்லும் பயணிகளை நடத்துநா் ஏற்ற மறுத்தாா். பேருந்து புறப்பட்ட போது திருப்பத்தூா் பயணிகள் பேருந்தில் ஏற்றப்பட்டனா். இதனால், கைக் குழந்தைகளுடன் பெண்கள் பேருந்தில் நின்றவாறு பயணித்தனா்.
இதுகுறித்து திருப்பத்தூரில் உள்ள குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் பயணிகள் தகவல் தெரிவித்தனா். இதனால், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் திரண்ட பயணிகளின் உறவினா்கள் அந்தப் பேருந்து அங்கு வந்தவுடன் அதை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த திருப்பத்தூா் போலீஸாா் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பயணிகளிடமிருந்து புகாா் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா், பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.