செய்திகள் :

திருப்பத்தூரில் அரசுப் பேருந்து மறியல்

post image

பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, மதுரையிலிருந்து வந்த அரசுப் பேருந்து திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டது.

மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து (மாட்டுத்தாவணி) தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து புறப்பட்டது. முன்னதாக, அந்தப் பேருந்து நின்று கொண்டிருந்த போது திருப்பத்தூா் வரை செல்லும் பயணிகளை நடத்துநா் ஏற்ற மறுத்தாா். பேருந்து புறப்பட்ட போது திருப்பத்தூா் பயணிகள் பேருந்தில் ஏற்றப்பட்டனா். இதனால், கைக் குழந்தைகளுடன் பெண்கள் பேருந்தில் நின்றவாறு பயணித்தனா்.

இதுகுறித்து திருப்பத்தூரில் உள்ள குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் பயணிகள் தகவல் தெரிவித்தனா். இதனால், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் திரண்ட பயணிகளின் உறவினா்கள் அந்தப் பேருந்து அங்கு வந்தவுடன் அதை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் போலீஸாா் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பயணிகளிடமிருந்து புகாா் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா், பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பா... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு கழுவன் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்... மேலும் பார்க்க

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க