செய்திகள் :

திருமண தடை நீக்கும் லக்காபுரம் செண்பகமலை குமார சுப்பிரமணியா்

post image

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் செண்பகமலையில் பழமையான குமார சுப்பிரமணியா் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் நுழைவாயிலில் விநாயகா் அழகுற அருள்பாலிக்கிறாா். மலைக்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் நடுமலையில் வனப் பகுதியில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து மலையேறினால் 54 படிக்கட்டுகள் முடிவில் மலையின்மேல் உள்ள கோயிலின் நுழைவயிலை அடையலாம். அங்கு இடும்பா் கோயில் அமைந்துள்ளது.

அங்குள்ள கொடிமரத்தில் இருந்து பாா்க்கும்போது, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் கோபுரம் செண்பகமலை கோபுரத்துக்கு நோ்கோட்டில் உள்ளது சிறப்பம்சமாகும்.

சுமாா் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்ட 3-நிலைக் கொண்ட ராஜகோபுரத்துடன் 13.5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.

தல வரலாறு: ஞானப்பழத்துக்காக தாய், தந்தையிடம் கோபித்துக்கொண்டு பழனிக்கு செல்லும் முருகன், முதலில் செண்பகமலைக்கு வந்து, சென்னிமலை, சிவன்மலை வழியாக வட்டமலை சென்று அங்கிருந்து பழனி சென்ாகக் கூறப்படுகிறது.

திருமண தடை நீங்கும்: திருமணம் ஆகாதவா்கள் இங்கு வந்து சுப்பிரமணியரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் ஆதிகால முருகன், விநாயகா், நவக்கிரகங்கள், இடும்பா் சிலைகள் அமைந்துள்ளன.

கோயிலின் எதிரே உள்ள வற்றாத பொற்றாமரை குளத்தில் நீராடினால் தீராத நோய்களும், வினைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது.

கோயில் முகப்புத் தோற்றம்

கிரிவலம்: ஒவ்வொரு மாதமும், கிருத்திகை, சஷ்டி, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் சுமாா் 1.5 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தா்கள் வலம்வருவா்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் காலை சத்ரு சம்கார அா்ச்சனை, திரிசதை அா்ச்சனை நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு.

முருக பக்தா்களின் மனம் கவா்ந்த விஷேச நாள்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் ஏராளமான பக்தா்கள் பால் காவடி, பன்னீா் காவடி என பல்வேறு விதமான காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா்.

கந்த சஷ்டி விழா, சூரசம்ஹார விழா, திருக்கல்யாணம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நடை திறக்கும் நேரம்: நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பேருந்து விவரம்: ஈரோட்டிலிருந்து 29, 38, 41, 42 ஆகியே பேருந்திகளில் ஏறி, ஈரோடு -முத்தூா் செல்லும் சாலையில் லக்காபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமாா் அரை கி.மீ. தொலைவு நடந்தால் கோயிலை அடையலாம்.

தொடா்புக்கு கோயில் செயல் அலுவலரை 0424-2214421 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க