இக்னோ பட்டமளிப்பு விழா: சென்னை மண்டலத்தில் இருவருக்கு தங்கப் பதக்கம்
திருமணமே வேண்டாம்: எதிர்நீச்சல் நாயகியின் வைரல் விடியோ!
திருமணமே வேண்டாம் என்று கூறும் எதிர்நீச்சல் நாயகி பார்வதியின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல் 2. இத்தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் முதல்பாகத்தில் மதுமிதா நாயகியாக நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார்.
சின்ன திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, சன் தொலைக்க்காட்சியில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடிகை தேவையானியுடன் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் சிறப்புத் தொகுப்பில் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் சபரிக்கும், பார்வதிக்கும் இடையே சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இரண்டில் எது பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேட்பார், அதற்கு இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்பதுபோன்று நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதில், காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமா? என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, பார்வதி திருமணமே வேண்டாம் என்று பதில் கூறினார். சபரி காதல் திருமணம் என்றும் கூறினார்.
ஆண் நண்பர்கள் பிடிக்குமா? பெண் நண்பர்கள் பிடிக்குமா? என்ற கேள்விக்கு சபரிக்கு ஆண் நண்பர்கள் பிடிக்கும் என்றும் பார்வதி பெண் நண்பர்கள் பிடிக்கும் என்று கூறினார்.
இதையும் படிக்க: 'என்னப்பா இப்படி எழுதியிருக்க...’ டிராகன் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!
நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்ற கேள்விக்கு பார்வதி சிங்கில் என்றும் கரிகாலன் இரண்டுமே இல்லை என்றும் சொல்கிறார். பூனை பிடிக்குமா நாய் பிடிக்குமா என்ற கேள்விக்கு இருவரும் நாய் பிடிக்கும் என்று கூறுகிறார்கள்.
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.