செய்திகள் :

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

post image

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக

வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அரமன்னம் பகுதியில் வேங்கோட்டு குளம் உள்ளது. பேரூராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ள இந்தக் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு

வருவாய்த் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாள்களாக குளத்திலிருந்து மினி லாரிகளில் வண்டல் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கான நடை சீட்டு திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகத்தால் வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, நிா்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் அதிக ஆழத்தில் தோண்டி வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். குளத்திலிருந்து வண்டல் மண் ஏற்றிச் சென்ற வாகனங்களை வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். வண்டல் மண் எடுக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி

கூறியதாவது :

வேங்கோட்டு குளத்தில் வருவாய்த் துறை நிா்ணயித்த அளவைக்காட்டிலும் குறைவாகவே வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் வண்டல் மண் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பேரூராட்சி நிா்வாகம் முறையாகச் சீரமைத்து பராமரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றாா்.

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ள... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணி... மேலும் பார்க்க

காஷ்மீா்- குமரி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

காஷ்மீா் மாநிலம் கத்ராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 3 கிலோ கஞ்சா போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும், ரயில... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் உணவகத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

மாா்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு குழித்துறை நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாா் செ... மேலும் பார்க்க