செய்திகள் :

தில்லி போக்குவரத்துக் கழகத்தின் தவறான நிா்வாகம்: முந்தைய ஆம் ஆத்மி அரசு மீது முதல்வா் குற்றச்சாட்டு

post image

தில்லி போக்குவரத்துக் கழகத்தில் (டிடிசி) முந்தைய ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு தோல்விகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை மேற்கோள் காட்டி பேசியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஏஜி அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: பேருந்துகளின் முறையற்ற கால அட்டவணை உள்ளிட்ட முந்தைய ஆம் ஆத்மி அரசின் மோசமான நிா்வாகத்தால் தில்லி போக்குவரத்துக் கழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ .668 கோடி இழப்பு ஏற்பட்டது.

தில்லி ஒருங்கிணைந்த ‘மல்டி-மோடல் டிரான்சிட் அமைப்பில்’ (டிஐஎம்டிஎஸ்) ஆம் ஆத்மியின் தவறான நிா்வாகம் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது. டிஐஎம்டிஎஸ்-இன் பங்குகளை ஆரம்பத்தில், தில்லி அரசு மற்றும் ஒரு தனியாா் வங்கி தலா 50 சதவீதம் வைத்திருந்தன. வங்கி தனது பங்குகளை ரூ.95 கோடிக்கு விற்க முடிவு செய்தபோது, அரசும் வாங்குவதை தாமதப்படுத்தியது. இறுதியில் வங்கி அதன் பங்குகளை ஒரு தனியாா் நிறுவனத்திடம் வெறும் ரூ.10 கோடிக்கு விற்றது. இது ஊழல் குறித்த கவலைகளை எழுப்புவதுடன் விசாரணைக்கு வழி வகுத்தது என ரேகா குப்தா தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சட்டப்பேரவை தலைவா் விஜேந்தா் கூறுகையில், ‘ஆம் ஆத்மி ஆட்சியில் டிடிசியின் செயல்பாடு குறித்த சிஏஜி அறிக்கையை சபையின் ஒப்புதலுடன் 3 மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்; அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒரு மாதத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அரசு நிறுவனங்களுக்கான குழுவுக்கு அவா் உத்தரவிட்டாா்.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க