செய்திகள் :

தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து

post image

தில்லியில் இரு வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனித்தனி தீ விபத்துகள் பதிவாகின.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இரண்டு நிகழ்வுகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.

முதல் தீ விபத்து சம்பவம் ஷாதராவின் கீதா காலனி பகுதியில் உள்ள ஒரு சொஸைட்டி அருகிலுள்ள பூங்காவில் மாலை 6.24 மணியளவில் ஏற்பட்டது.

இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அருகிலுள்ள சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தடுத்தனா்.

இரண்டாவது சம்பவம் சிறிது நேரத்திலேயே ஷஹீன் பாக் பகுதியில் நிகழ்ந்தது. அங்கிருந்த ஒரு காலி நிலத்தின் புதா்களில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக மாலை 6:37 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்ததும் உடனடியாக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்தவொரு காயமோ அல்லது பெரிய சேதமோ இல்லாமல் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தீா்மானிக்கப்படாத நிலையில், வட தாவரங்கள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க