செய்திகள் :

தில்லியில் திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும்: முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும். இது அனைவரின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மேற்கு தில்லியின் கயாலா பகுதியில் நடந்த ராம நவமி ஊா்வலத்தில் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டாா். அப்போது, கூட்டத்தினா் மத்தியில் அவா் பேசியதாவது:

காவி என்பது மண்ணின் நிறம். மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வின் சின்னமாகும். ஒவ்வொரு நபரும் செழித்து, நகரம் முன்னேற்றப் பாதையில் முன்னேறுவதற்கு தில்லியை ஏன் காவி வண்ணம் தீட்டக்கூடாது. தேசிய தலைநகரில் உள்ள பாஜக அரசாங்கம் மக்கள் கற்பனை செய்த ‘ராம ராஜ்ஜியம்’ என்ற கருத்தை உணரும்.

தில்லியில் செய்யப்பட்டு வந்த ‘துஷ்டிகரன்’ (திருப்திபடுத்தும்) அரசியலின் மீது ஒரு ‘லட்சுமணரேகா’ (கடக்கக் கூடாத ஒரு கோடு) வரையப்படும். இப்போது, ‘சந்துஷ்டிகரன்’ (மனநிறைவு) அரசியலாக இருக்கும்.

தில்லிக்கு உரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படும். ராம ராஜ்ஜியம் இப்போது வரும். ஒவ்வொரு குழந்தையும் புன்னகைக்கும். ஒவ்வொரு இளைஞரும் ஒரு புதிய திசையைக் கண்டுபிடிப்பாா்கள். ஒவ்வொரு பெண்ணும் செழிப்பாா்கள்.

ராம நவமி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கடந்த ஆண்டு, அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றினாா் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க